முசாபர்பூர்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வதன் மற்றும் பீகார் மாநில சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் முசாபர்பூரில் மூளை காய்ச்சல் (Advanced Encryption Standard) காரணமாக 126-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். அதே நேரத்தில், முக்கியமாக மக்களிடையே இந்த காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் வேகமாக பரவுகிறது என்றும் கூறப்படுகிறது. இதற்கு மத்திய அரசு முதல் மாநில அரசுகளே பொறுப்பு. 


இந்த நாட்களில் முசாபர்பூரில், முழு மருத்துவமனையும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளது. அதே நேரத்தில், அங்கு இறந்த குழந்தைகளின் உடல்களும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய சுகாதார அமைச்சரும், மாநில அரசின் சுகாதார அமைச்சரும் பொறுப்பேற்க்க வேண்டும் என தமன்னா ஹாஷ்மி கூறியுள்ளார்.


மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பீகார் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே மீது முசாபர்பூரைச் சேர்ந்த சமூக சேவகர் தமன்னா ஹாஷ்மி புகார் அளித்துள்ளார். மேலும் முசாபர்பூர் சிஜிஎம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும்.


அந்த மனுவில், மத்திய சுகாதார அமைச்சரும், மாநில சுகாதார அமைச்சரும் மர்ம காய்ச்சல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதுவும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக, பீகாரில் நூற்றுக்கணக்கான ஏழை குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த நோயைப் பற்றி சரியான முறையில் அரசு விழிப்புணர்வு செய்திருந்தால் நூற்றுக்கணக்கான குடும்ப உறுப்பினர்கள் தப்பிப்பிழைத்திருக்கலாம் என மனுவில் கூறப்பட்டு உள்ளது.