மோடி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முன்னேற்றம் இல்லாத அரசுக்கு நல்வாழ்த்துகள் என ராகுல் காந்தி கிண்டல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக அரசு 2வது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை அக்கட்சியினர் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தின் சிறப்புகள் குறித்தும் அவர்கள் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தனது 100வது நாளை கொண்டாடுவது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, 100 நாட்கள் ஆகி விட்டன, மோடி அரசுக்கு தமது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; ‘நாட்டுக்கு சரியான தலைமை இல்லாமை மற்றும் சீர்குலைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டமிட்ட இலக்கு ஏதுமில்லாத நிலையில் இல்லாத நிலையில் ஜனநாயகத்தை நீர்த்துப்போக வைப்பதிலும் விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்களின் குரல்வளையை நெறிப்பதிலும் இந்த அரசின் 100 நாள் ஆட்சிக்காலம்  கடந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.



மேலும், சரியான திட்டமிடலும், பயணமும் தேவைப்படும் நிலையில், அது இல்லாத தலைமையும், பொருளாதார சூறையாடலும் நடைபெறுகிறது என ராகுல் பதிவிட்டுள்ளார்.