லக்னோ: உ.பி.யில் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது சட்டசபை தேர்தல். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக அகிலேஷ் யாதவ் தன்னந்தனியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.


இதையொட்டி முதல்வர் அகிலேசுக்கு எதிராக கட்சிக்குள் சதி நடப்பதாக சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ உதய்வீர் சிங் குற்றம்சாட்டி உள்ளார். இந்நிலையில் முலாயம் சிங்கின் இரண்டாவது மனைவிதான் இந்த வேலைகளை செய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது.