சி.ஆர்.பி.எஃப் வீரரின் முகத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதாக உயரதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையத்தின் துணை ஆய்வாளர் டி.கே.திரிபாதி நேற்று பணியில் இருந்தார். அப்போது கான்ஸ்டபிள் அமோல் காரத் என்பவரிடம் வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார். 


இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மேலும் கோபமடைந்த துணை ஆய்வாளர், கான்ஸ்டபிள் அமோல் காரத்தின் முகத்தில் வெந்நீரை ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.


இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த முழு விவரங்கள் வரும் 10 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது