புதுடெல்லி:  வட மாநிலங்களில் பனிமூட்டம் அளவுக்கதிகமாக இருப்பதால் சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 50 மீட்டர்வரை ஆட்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி காணப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பனிமூட்ட காரணத்தினால் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டது. பல்வேறு சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.


ரெயில்கள் சேவையிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 81 ரெயில்கள் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டது. இதில் 21 ரெயில்களின் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ரெயில்கள் ரத்து செய்ய்பபட்டு உள்ளது.