டெல்லியில் வாக்குப்பதிவு தினத்தன்று மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் புதிய வசதியை கொடுத்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்காக  டெல்லி மெட்ரோ நிர்வாகம் வசதி ஒன்றை செய்து கொடுத்துள்ளது. 


துவாரகா பகுதி 21 முதல் வைஷாலி செல்லும் ரெயில் சேவை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். மே 12 க்கு பின்னர் வழக்கம் போல மெட்ரோ ரயில் அட்டவணைப்படி இயங்கும்.