சமீபத்தில், தலைநகர் டெல்லியில், தனது நீண்ட நாள் காதலியை 35 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கொலையை மறைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், அந்த காதலன் அப்தாப் கைதான பின்னர், கொலை சம்பவம் குறித்து அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், டெல்லியில் அதேபோன்று மற்றொரு கொடூர சம்பவம் ஒன்று, தற்போது நிகழ்ந்துள்ளது. இதில், தாயும், மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில், அந்த பெண் தனது கணவரை மகனின் கையால் கொலைசெய்ய வைத்து, அதை மறைக்க உதவிசெய்துள்ளார். கணவரின் உடலை பல்வேறு துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து மறைத்துள்ளனர். 


மேலும் படிக்க | பெண் ஆசிரியரிடம் வகுப்பறையில் அத்துமீறிய மாணவர்கள் - பாய்ந்தது வழக்கு


மேலும், அவரின் உடல் உறுப்புகள் சில, கிழக்கு டெல்லியின் பாண்டவ் நகர் பகுதிகளில் வீசியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்த, கொலை செய்த நபரை கைதுசெய்துள்ளனர். தற்போது, மகன், தாய் இருவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 


ஏன் கொலை செய்தார்கள், எப்போது செய்தார்கள், எத்தனை நாள்கள் இதனை மறைத்து வைத்தார்கள், டெல்லி ஷ்ரத்தா கொலைக்கு பின் இந்த கொலை நிகழ்ந்ததா என பல்வேறு கேள்விகள் இந்த சம்பவத்தையொட்டி எழுந்துள்ளன. நாட்டையே உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அப்தாப்பிடம், உண்மை கண்டறியும் சோதனை இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Baba Ramdev Apology : பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து - மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ