புதுடெல்லி: டெல்லி காவல்துறையின் (Delhi Police) சிறப்புப் பிரிவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. சிறப்பு செல் (Special Cel) மூன்று ஐ.எஸ்.ஐ.எஸ் (Islamic State) தீவிரவாதிகளை கைது செய்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லியின் வஜிராபாத்தில் நடந்த மோதலுக்குப் பின்னர், மூவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். மூவரையும் விசாரித்த பின்னர், டெல்லியில் பல இடங்களில் ஸ்பெஷல் செல் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விரைவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளது. (விரிவான செய்திகளுக்காகக் காத்திருக்கிறது ...)


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.