டெல்லி:  டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியான் மெகமூத் அக்தர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.  இந்திய பாதுகாப்பு, ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை போலீசார் அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. 


பாகிஸ்தான் தூதர் அப்துல் பஷீத்திடம் வெளியுறவு அமைச்சகம் அதிகாரி கைது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறை அளித்த தகவலின் பேரில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அதிகாரியிடமிருந்து இந்திய ராணுவ ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.