டெல்லி: தேசிய விலங்கியல் பூங்காவில் சுமார் 8 பறவைகள் மீது ஏவியன் ஃபுளூ வைரஸ் அடைந்துள்ளது மற்றும் சில பறவைகள் உயிரிழந்தது. தற்காலிகமாக தேசிய விலங்கியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.


இதில் பறவைகளுக்கு H5N1 ஏவியன் இன்புளூயன்சா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஏவியன் ஃபுளூ வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.