மத்தியப் பிரதேச மாநில ராஜ்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மாரடைப்பால் காலமானார்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு வரும் நவம்பர் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜ்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தேவி சிங் பட்டேல் மாரடைப்பால் காலமானார். தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக கூறப்படும் நிலையில், அவரது மறைவு பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சட்டசபைத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் கடந்த 2 ஆம் தேதியே தொடங்கிவிட்டாலும், 9 ஆம் தேதிதான் கடைசி நாள் என்பதால், புதிய வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என கூறப்படுகிறது.