ஆந்திரப்பிரதேசம்: திருப்பதியில் இனி ஒருநபர் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்யும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிக்கயால் ராவ் கூறியுள்ளார். ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் மணிக்கயால் ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு தனிநபர் தரிசனம் செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார். தரிசனத்திற்கு பலர் சிபாரிசு செய்வதால் ஒருவரே பலமுறை ஏழுமலையானை தரிசிக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். 


ஆதார் கார்டு மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.