காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டால் பாகிஸ்தான் கூட தீபாவளி கொண்டாடும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொதுமக்களிடையே பிரச்சாரம் நடத்தி பேசி வருகின்றனர்.


அந்தவகையில் பாஜக காட்சி மற்றும் குஜராத் முதல்வருமான விஜ்ய ரூபானி பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் மே மாதம் 23-ம் தேதி வெளியாக உள்ளன. காங்கிரஸ் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம். ஒருவேளை தவறுதலாக வெற்றி பெற்றால் பாகிஸ்தான் கூட தீபாவளி கொண்டாடப்படும். அண்டை நாட்டின் கருத்தை தான் காங்கிரஸ் கட்சியினர் பேசுகின்றனர். என்று தெரிவித்தார்.