பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய முனையமாக திகழும் குர்கானுக்கு டெல்லியில் இருந்து வாகனங்களில் வரவேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில்  கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  நேற்று இரவு குர்கான் பகுதியில் பெய்த மழையினால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நேற்று இரவு முதல் டெல்லி- குர்கான் நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு பாதித்தது. மேலும் வந்து சென்ற வாகனங்கள் ரோட்டில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மணிக்கணக்கில் வாகனங்கள் சாலைகளில் சிக்கி தவிக்கின்றன.


இதனால் காலையில் அலுவலங்களுக்கு செல்ல முடியாமல் பலர் தவித்தனர். குர்கன் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வரை சாலையை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர்.