உத்திர பிரதேசத்தில் வசிக்கும் ஒரு ஆண், தன்னை கடித்த பாம்பை குடிபோதையில் துண்டு துண்டாக கடித்து துப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திர பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவர், குடிபோதையில் இருந்த போது தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு துண்டு துண்டாக கடித்து துப்பியுள்ளார். 


ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் தன் வீட்டில் அமர்ந்து மது அருந்தி வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த பாம்பு அவரை கடித்து விட , குடி போதையில்  கோபத்துடன் பாம்பை பிடித்து துண்டு துண்டாக கடித்து துப்பியுள்ளார். 


இதன் காரணமாக ராஜ்குமாரின் உடலில் விஷம் ஏறியுள்ளது., இதனையடுதுத உடனடியாக வீட்டில் இருந்த ராஜ்குமாரின் தந்தை மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ராஜ்குமாரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது மகனின் நிலை கண்டு ராஜ்குமாரின் தந்தை பாபு ராம் கவலையில் உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சிலர் ராஜ்குமாரின் உடல்நலம் மீண்டும் நல்ல நிலைக்கு திறும்ப, கொல்லப்பட்ட பாம்பினை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்த, அச்சத்தில் இருந்த அவரது குடும்பத்தார் பாம்பை நன்முறையில் தகனம் செய்தனர்.