புது டெல்லி: காற்று மாசுபாட்டால் தலைநகர் டெல்லி தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தனிநபர் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் பேருந்து பயணம் செய்பவர்களுக்கு புதிய சலுகைகளை டெல்லி அரசாங்கம் வழங்கியுள்ளது. அதன்படி பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவில் இருப்பவர்களுக்கும் பேருந்தில் 75% கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


மேலும், சாதாரண பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 5-15 ரூபாய் கட்டணமும், குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 10-25 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இதுதவிர 21 வயதுக்குட்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளன. பொருளாதரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மாதாந்திர கட்டணத்தில் 75% சலுகை வழங்கப்படவுள்ளது.


இதுகுறித்து டெல்லி போக்குவரத்துத்துறை கூறுகையில் "சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. இதனால் காற்று மாசுபாடு குறையும் என கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளது.


ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.