உத்தரகாண்டில் உள்ள உத்தர்காஷி பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 4.0-ஆக பதிவு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகாண்டில் உள்ள உத்தர்காஷி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை சரியாக 6:12 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ANI தகவலின்படி, ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.0 ஆக பதிவானதாக தெரியவந்துள்ளது. 


நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். 



மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயிர் பலி மற்றும் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.