திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் விபத்திற்குள்ளானது. இன்று பகல் 12.45 மணிக்கு துபாயில் விமானம் தரையிறங்கிய போது விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியது. இதனால் பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்ட நிலையில், விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் ஏகே521 விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏகே521 விமானத்தில் 282 விமானிகளும் 18 ஊழியர்கள் இருந்ததாகவும், இவர்களில் 226 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது .விபத்து காரணமாக துபாய் விமான நிலைய பணிகளில் எட்டு மணி நேர தாமதம் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் குறித்த தகவல்களை பெற அவசர கால எண்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.


திருவனந்தபுரம்-0471-3377337


ஐக்கிய அரபு அமீரகம் - 8002111


பிரிட்டன்- 00442034508853


அமெரிக்கா - 0018113502081