ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீரில் காவலராக பணியாற்றிய முகம்மது சலீம் என்பவர் குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அதன் பின்னர் அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.


இதை தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படை வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


காவலர் முகமது சலீமை கடத்திக் கொலை செய்த பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, இன்னும் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.