சட்டவிரோத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி: யோகி ஆதித்யநாத்!

உள்ளாட்சி தேர்தலுக்காக, யோகி ஆதித்தியநாத் தனது மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் கடந்த 2017 மார்ச்,19 முதல் யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக செயல்பட்டு வருகின்றார். தற்போது அம்மாநிலத்தில் உள்ளாச்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. 3 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்ட உள்ளாட்சி மன்ற தேர்தலின் முதல் வாக்கொடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தது.
மேலும், இரண்டு கட்ட வாக்கொடுப்பு மீதமுள்ள நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்தியநாத், கடந்த 23-ம், தேதி பைரஜபாத்தில் தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தையும் 24-ம், தேதி ஜான்ஸியில் இன்று தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்தினார்.
இதை தொடர்ந்து தற்போது, பால்ராம்பரில் இன்று காலை தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;- சட்டவிரோதம் சம்மந்தமான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு மாநிலத்தில் நிறைவேற்றப்பற்றது.
இதற்கு முன்னதாக, நடைபெற்ற ஆட்சியில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் உத்தரவுகள் மாநிலத்தில் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சட்டவிரோதம் சம்மந்தமான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டது. என்று, பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.