கடந்த 2012-ம் ஆண்டு 20 வங்கிகளின் கூட்டமைப்பு இணைந்து வீடியோகான் குழுமத்திற்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கிருந்ததாகவும், இதில் ஒரு வங்கியான ICICI வீடியோகான் குழுமத்திற்கு ரூ.3,250 கோடியை அளித்ததகாவும் தெரிவிக்கப்பட்டது. ICICI வங்கியிடம் இருந்து கடன் பெற்ற 6 மாதத்துக்குப் பின்னர் இந்த நிறுவனத்தின் உரிமையினை ரூ.9 லட்சத்துக்கு தீபக் கொச்சாரின் அறக்கட்டளை ஒன்றுக்கு வேணுகோபால் தூத் கொடுத்துள்ளார். ICICI-யிடம் கடன் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தகவல்கள் வெளியே வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் இதுக்குறித்து விசாரிக்க ICICI வங்கி சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழு பின்னர் கடந்த அண்டு சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.


ICICI வங்கியின் மேலாண் இயக்குனராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோ கான் குழுமத்திற்கு, சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கடன் வழங்கியுள்ளார். இவ்வாறு வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய சந்தா கோச்சார், தனது கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்தின் மூலம் ஆதாயம் அடைந்துள்ளார் எனக் கூறி, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.


ICICI முன்னாள் மேலாண் இயக்குனர் சந்தா கோச்சார்(Chanda Kochhar) மற்றும் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் (Venugopal Dhoot) ஆகியோரின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில், அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டன.


இந்தநிலையில், இன்று சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் மட்டுமில்லாமல், அவரது தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை மாலை நான்கு மணி வரை நடைபெறும் எனத்தெரிகிறது.