புதுடெல்லி: முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்துகொண்டார். ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை போராட்டம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்றிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்த்த ராம் கிஷன் கிரேவால் தனது குடும்பத்தாருக்கு கைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்ள விஷம் உட்கொண்டதாக தகவல் வந்துள்ளது.


முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தேர்ந்தெடுத்ததாக அவர் எழுதிவைத்திருந்த தற்கொலை செய்துகொண்டார். இதையொட்டி அவரை ஜந்தர் மந்தரிலிருந்து ஆர்எம்எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தார்.