இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2009ம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக இருந்தவர் மாதவன் நாயர் (வயது 75). இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கடிதம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பெயரில் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து மாதவன் நாயர் கேரள போலீஸில் புகார் அளித்தார்.


இந்த கடிதம் குறித்து முதலில் மறுத்த மாதவன் நாயர், கொலை மிரட்டல் குறித்து உளவுத்துறை தமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.