இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து எஸ் ஜெய்சங்கர்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. அக்டோபரில் ஆசிய கோப்பையை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவது குறித்து பிசிசிஐ பேசியதிலிருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து கலவையான எதிர்வினைகள் உள்ளன. ஆனால் தற்போது முதல்முறையாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு பதிலளித்துள்ளார். "போட்டிகள் தொடர்ந்து வருகின்றன, அரசாங்கத்தின் நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று அவர் தெளிவாகக் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் சாதாரணமாகக் கருதக்கூடாது என்று வெளியுறவு அமைச்சர் வெள்ளிக்கிழமை கூறினார். இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்லமாட்டார்கள் என்ற பிசிசிஐ அறிவிப்புக்குப் பிறகு 2023 ஆசியக் கோப்பை தொடர்பாக பிசிசிஐ மற்றும் பிசிபி இடையேயான சர்ச்சைக்கு மத்தியில், ஜெய்சங்கர், 'போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன, அரசாங்கத்தின் நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்' என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்லோரும் குரல் எழுப்பினால் தான் அழுத்தம் ஏற்படும்


'பயங்கரவாதத்திற்கு ஒரு நாட்டிற்கு உரிமை உண்டு என்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் அதை சட்டவிரோதமாக்க வேண்டும். இதற்காக அந்த நாட்டின் மீது சர்வதேச அழுத்தம் இருக்க வேண்டும். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்பும் போது இந்த அழுத்தம் தொடரும். பயங்கரவாதத்தால் அதிக ரத்தம் சிந்திய நாடு என்பதால் இதில் தலைமைத்துவத்தை காட்ட வேண்டும் என்று ஜெய்சங்கர் செய்தி சேனல் ஒன்றில் கூறினார்.


மேலும் படிக்க | PAKvsENG: ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கி சத்தம்! பதட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள்!


பயங்கரவாதம் ஒரு சிக்கலான பிரச்சினை


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், “இது ஒரு சிக்கலான பிரச்சினை. உங்கள் தலையில் துப்பாக்கியை வைத்தால் பேச முடியுமா? எல்லை தாண்டிய பயங்கரவாதம் சாதாரணமானது என்று நாம் நினைக்கவே கூடாது. தனது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஆதரப்பவர் யாரேனும் இருப்பார்களா. 


ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ஜெய்சங்கர்


ஜெய்சங்கர் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்தும் பேசினார். அப்போது அவர், 'அரசாங்கம் மக்கள் பக்கம் நின்றது. நாம் நமது நாட்டிற்கு எது நல்லது என்பதை பார்க்க வேண்டும். இந்த நிலைமைக்கு விரைவில் இராஜதந்திர தீர்வை நமது நாட்டு மட்டு இல்லை பல நாடுகள் விரும்புகின்றன.  இதில் சுமார் 200 நாடுகள் உள்ளன. அவர்களும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும், விலைகள் குறைய வேண்டும், பொருளாதாரத் தடைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


மேலும் படிக்க | அடுத்த ஆண்டு இந்திய அணி விளையாடும் போட்டிகள்: முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ