டெல்லியில் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.


இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு தமிழக விவசாயிகள் மீது கொண்டுள்ள விரோதபோக்கினை கைவிட வலியுறுத்தி டெல்லியில் 12வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


12-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் இவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். முதலாவதாக மரத்தில் ஏறி தூக்குப்போடுவது, பிச்சைஎடுப்பது, தெருவில் படுத்து புரள்வது, மொட்டையடிப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். 


இந்நிலையில் நேற்றைய தினம் தமிழக நடிகர்களான விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் ஆகியோர் டெல்லியில் வந்து இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு விதமான அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் வந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.