ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”புல்வாமா மாவட்டத்தின் பஹ்ம்னூ பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் இன்று காலை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் பணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி  சுட்டுக் கொல்லப்பட்டான்” என்றார்.


இதனையடுத்து, பஹ்ம்னூ பகுதியில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.