ஷாகிதாபாத் : உத்திர பிரதேச மாநிலமான ஷாகிதாபாதில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகினர்.


உத்திர பிரதேச மாநிலம் ஷாகிதாபாத் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 12 பேர் உடல் கருகி பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.