மகாராஷ்ட்ர மாநிலம் நவி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேவி மும்பையின் செக்டர் 44, நேருல் சீவுட்ஸ் என்ற இடத்தில் உள்ள உயரமான கட்டிடத்தில் சனிக்கிழமை காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நவி மும்பை பகுதியில் 21 மாடிகள் கொண்ட பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் மளமளவென பற்றிய தீ, கொளுந்து விட்டு எரிந்ததில், அப்பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது.


தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எந்த அடுக்கில் தீ பிடித்தது, தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.