திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் லட்டு தயாரிக்கும் இடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று காலை லட்டு தயாரிக்கும் இடத்தில் இரண்டாம் சமையலறையில் திடீரென தீ பற்றியது. புகை போக்கிக் குழாயில் உள்ள நெய் திட்டுக்களில் தீபரவியதால் மிகவும் பரபரப்பு உண்டாகியது. இதனையடுத்து ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். மேலும் அந்த புகை போக்கிக் குழாய் வழியாக மற்ற அறைகளுக்கும் தீ பரவியது.


இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்களில் வந்த  தீயணைப்புப்படை வீரர்கள் தீயை அணைத்தமர். இந்த விபத்தினால் யாருக்கும் காயமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


முன்னதாக கடந்த மாதம் லட்டு தயாரிக்கும் இதே இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று 2-வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.