டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று திடிரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கட்டிடத்தின் தரைதளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தகவலானது தீயணைப்பு மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.


தீ விபத்தை அடுத்து அலுவலகத்தில் இருந்த தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். நான்கு தீயணைப்பு வாகனங்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தமிழக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வந்து சசிகலா தரப்பிலான ஆவணத்தை தாக்கல் செய்தார்.