ராம்பூரில் SUV வாகனம் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தின் ஷாபாத் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்தனர்.


கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விதா சாகர் சர்மா இந்த தகவலை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். ஷாஹாபாத்-பில்சி வழித்தடத்தில் SUV வாகனதிற்க்கும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் SUV வாகனதில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவலை அறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீட்புப்படை சம்பவ இடத்தை வந்தடைந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்ததாக அவர் கூறினார். 


காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிக்கிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.