குஜராத் பேரவையின் இறுதிக்கட்ட தேர்தலில் வாக்களிக்க நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அகமதாபாத்தின் வஜல்பூரில் வருகை தந்து வாக்களித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று நடக்க இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 


இந்நிலையில் குஜராத் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் வாக்களிக்க நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வருகை தந்துள்ளார். அகமதாபாத்தின் வஜல்பூர் வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.