புதுடெல்லி: வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் ரயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. பனிப்பொழிவால் இன்று 70 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் செயல்படுகிறது. மேலும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 ரயில்களின் பயண நேர மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் டெல்லி வடக்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.


கடும் பனி மற்றும் மழை காரணத்தால் ஜம்மு காஷ்மீரில் அதிக அளவு குளிர் காணப்பட்டு வருகிறது.


குளிர்காலம் காரணமாக வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடும் பனிபொழிவு நீடிக்கிறது.