புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோசமான வானிலை காரணமாக டெல்லி செல்லும் ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.


கடும் பனிமூட்டடின் காரணமாக டெல்லியில் இருந்து புறப்படும் 101 ரயில்கள் தாமதமாக செல்கின்றன. 11 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானகளும் இந்த பனிமூட்டடின் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 6 சர்வதேச விமானங்கள் தாமதமாகப்பட்டுள்ளது. 13 விமானங்கள் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேசம் லக்னோ, கான்பூர், மொரதாபாத் போன்ற இடங்களில் கடும் பணிமூட்டம் நிலவியது.


அடர்த்தியான கடும் பனி மூட்டத்தால் சண்டிகார் மற்றும் லூதியானா போன்ற இடங்களில் வாகன இயக்கம் பாதிக்கப்பட்டது