பாட்னா: தீவன ஊழல் தொடர்பான சாய்பாசா கருவூல வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு (Lalu Prasad Yadav) ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், தும்கா கருவூல வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் லாலு யாதவ் தற்போதைக்கு சிறையில் தான் இருப்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவன மோசடி (Fodder Scam) தொடர்பான மூன்று வெவ்வேறு வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், லாலு யாதவ், ஜார்க்கண்டின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான ராஜேந்திர ஆயுர்வேத நிறுவனத்தில் (RIMS) 23 டிசம்பர் 2017 முதல் நீதிமன்றக் காவலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக ரிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.


ALSO READ |  லாலு குடும்பத்தில் பிளவு? அரசியலை விட்டு விலகுவேன் என மகன் அறிவிப்பு


செப்டம்பர் 2013 இல் தீவன ஊழல் தொடர்பான முதல் வழக்கில் தண்டனை பெற்ற பின்னர் அவர் 2014 இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் தீவன ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில் தண்டனை பெற்ற பின்னர், மீண்டும் 23 டிசம்பர் 2017 அன்று பிர்சமுண்டா சிறைக்கு (Birsa Munda Central Jail) அனுப்பப்பட்டார். அன்று முதல் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்து வருகிறார். தற்போது லாலு ரிம்ஸில் (Rajendra Institute of Medical Sciences) நீதித்துறை காவலில் வைக்கப்பட்டு உள்ளார் குறிப்பிடத்தக்கது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR