கியோன்ஜ்நகர்: ஒரிசா மாநிலத்தில் இன்று மாலை கார் ஒன்று சாலையோர கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரிசா மாநிலம் கியோன்ஜ்நகர் மாவட்டத்தின் சர்தாப்பூர் பகுதியில், சர்தாப்பூர் காவல்துறை சராங்கத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்தில் பலியானவர்கள் ராய்ரங்பூர் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பின்னர் வீடு திரும்புகையில் இந்த விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.


காரின் கேஸ் கட்டர் பகுதியில் சிக்கி விபத்தில் படுகாயத்துடன் தப்பித்த நபரினை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்!