ஐதராபாத்தில் நடக்க இருக்கும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா இன்று அதிகாலை இந்தியா வந்தார். நவம்பர் 28 முதல் 30 வரை ஹைதராபாத்தில் இவாங்கா இருப்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். இவர்களுடன் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஸ் பங்கேற்றார். இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் அதிகமான தொழில் முனைவோர்கள் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் 100 தொழில்முனைவோரை அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா சந்திப்பார்.