புதுடெல்லி: டெல்லியின் மோதி பாக் பகுதியில் நேற்று இரவு இளம் பெண் ஒருவர் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எய்ம்ஸ் மருத்துவமனை இருந்து நொய்டா திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர சம்பவம் நடந்தது.


பாதிக்கப்பட்ட பெண் நொய்டாவில் வசிக்கிறார். அவர் வீட்டிற்கு செல்ல டாக்சிக்கு காத்திருந்த போது குற்றவாளி காருடன் வந்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக கூறி இருந்தான். 


அந்த காரில் உள்துறை அமைச்சக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. 


பெண் காரில் ஏறியதும், சிறிது தூரம் சென்றதும் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை கூட்டி சென்று அவன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். 


இந்த கோர விபத்து கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கியது. 6 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயா உயிரிழந்தார். இந்த நினைவு நாளை அனுசரிக்க உள்ளநிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.