ஒடிசாவில் ஊனமுற்ற சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவனை மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மாநிலத்தில் பரிபடா என்ற ஊரில் ஜகன்னாத் கோவிலில் யொந்த்க கொடூர சம்பவம் நடைப்பெற்றது. நேற்றுமுன் தினம் இரவு சாமிதரிசனம் செய்ய ஊனமுற்ற 11 வயது சிறுமி அந்தக் கோவிலுக்குச் சென்றார். அப்போது யாரும் இல்லாத நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்தப்பகுதியை சேர்ந்த விஷமி ஒருவன் கோவிலுக்குள் நுழைந்து அந்தச் சிறுமியை பாலியல் பலாத்தகாரம் செய்தான்.


உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தரையில் கிடந்த அந்தச் சிறுமியை கோவிலுக்கு வந்த சிலர் காப்பாற்றினர். கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அந்தச் சிறுமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் அந்தக் கயவனை தேடிப்பிடித்து சரமாரியாக அடித்துத் துவைத்துள்ளனர், பின்னர் அவனை போலீசாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.