உத்திரபிரதேசம் மாநிலத்தின் கமதேவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்ததால் வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரினை சேர்ந்தவர் அஜய்(22). இவர் அதே பகுதியில் வசித்து வரும் 19-வயது மதிக்கத்தக்க இளங்கலை பட்டதாரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.


தனது விருப்பத்தினை பலியான பெண்ணிடம் அஜய் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்ததினை அடுத்து தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து மீண்டும் மீண்டும் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கோரியுள்ளார்.


ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அஜய் நேற்று பலியான பெண்ணின் வீட்டிற்கு அருகில் அவரை கத்தியால் சரமாறியாக குத்தியுள்ளார். இச்சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க்கப்ட்ட இளம்பெண் அருகில் இருந்த லாலா லட்ச்பதி ராய் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லபட்டார்.


எனினும் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இதனையடுத்து அஜய் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.