புதுடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய் மற்றும் அதற்கான மருந்துகளின் பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருந்து உரிமம் பெற்ற 5 புதிய நிறுவனங்கள்


நாட்டில் அதிகரித்து  வரும் கருப்பு பூஞ்சைக்கு (Mucormycosis)  மருந்து தயாரிக்க மேலும் 5 புதிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமங்களை வழங்கியதுடன்,. இது வரை 5 நிறுவனங்கள் நாட்டில் ஆம்போடெரிசின் பி (Amphotericin-B ) என்ற மருந்து தயாரித்து வந்தன. இதில் Bharat Serum and Vaccines Ltd, BDR Pharmaceuticals, Sun Pharma, Cipla, Life Care Innovation ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், இந்த நோய்க்கான் மருந்து Mylan Lab நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.


நாட்டில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருக்காது
புதிய 5 நிறுவனங்களான NATCO Pharmaceuticals, Alembic Pharmaceuticals, Gufic Bioscience, Emcure pharmaceuticals  மற்றும் Lyka ஆகியவற்றுக்கு அரசாங்கம் இப்போது உரிமங்களை வழங்கியுள்ளது. இதனால், நாட்டில் கருப்பு பூஞ்சைக்கான ஆம்போடெரிசின் பி (Amphotericin-B ) மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 ஆக இருக்கும். இதனால்,  நாட்டிலுள்ள மக்களுக்கு இந்த மருந்து பற்றாக்குறை இருக்காது.


ஜூன் மாதத்தில் 5 லட்சம் 70 ஆயிரம் டோஸ்கள் தயாரிக்கப்படும்


 நாட்டின் ஏற்கனவே தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பழைய 5 நிறுவனங்கள் மே மாதத்தில் 1 லட்சம் 63 ஆயிரம் 752 டோஸ்களை உற்பத்தி செய்தன. இதனை  ஜூன் மாதத்தில் 2 லட்சம் 55 ஆயிரம் 114 டோஸ்கள் என்ற அளவிற்கு உயர்த்தும் திட்டம் உள்ளது. மே மாதத்தில் 3 லட்சம் 63 ஆயிரம் டோஸ்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது ஜூன் மாதத்தில் 3 லட்சம் 15 ஆயிரம் டோஸ்கள்  இறக்குமதி செய்யப்படும். இதனால், ஜூன் மாதத்தில் நாட்டில் மொத்தம் 5 லட்சம் 70 ஆயிரம் 114 தடுப்பூசிகள்  கிடைக்கும்.


ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை


இறக்குமதியை அதிகரிக்க அரசு நடவடிக்கை
அரசாங்கம் புதிதாக உரிமம் வழங்கிய 5 நிறுவனங்கள். ஜூலை மாதம் 1 லட்சம் 11 ஆயிரம் தடுப்பூசிகளை தயாரிக்கும். அதே நேரத்தில், இறக்குமதியை அதிகரிக்கவும் அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்காது.


Mucormycosis அதாவது கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
கருப்பு பூஞ்சையின் மருத்துவ பெயர் ம்யோகோர் மைகோஸிஸ். இது ஒரு அரிய மற்றும் ஆபத்தான பூஞ்சை தொற்று ஆகும்.  இந்த தொற்று பெரும்பாலும் உடலில் உள்ள சைனஸ்கள், நுரையீரல், தோல் மற்றும் மூளையைத் தாக்குகிறது.


கொரோனாவுக்கும் கருப்பு பூஞ்சைக்கும் என்ன தொடர்பு?
கோவிட் -19 (COVID-19) நமது நோய் எதிர்ப்பு சக்தியை பெரிதும் பலவீனப்படுத்துகிறது. இதனுடன், கோவிட் -19 சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். இதனால், கோவிட் -19 நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் கருப்பு பூஞ்சைக்கு காரணமான நுண்ணுயிரிகளுக்கு எதிராக போராட முடியவில்லை.


கருப்பு பூஞ்சை ஆபத்து உள்ளவர்கள் யார்?
எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் நோயாளிகள்
புற்றுநோய்ளிகள்
நீரிழிவு நோய் உள்ளவர்கள்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்
வெள்ளை இரத்த அணுக்கள் குறைவாக உள்ளவர்கள்
நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்


ALSO READ | கோவிட் நோயாளிகளைத் தாக்கும் Black Fungus தொற்று எவ்வளவு ஆபத்தானது?