பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 10-ம் தேதி பாலஸ்தீனம் செல்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கு ரமல்லா நகரத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். 


அதிபர் ஷேக் காலிஃபா பின் சையத் அல் நஹ்யாவின் அழைப்புக்கு இணங்க அந்நாட்டில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் முடிவு செய்துள்ளார்.


இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.