ஜிஎஸ்டி விளைவு: சிலிண்டர் ரூ.32 உயர்வு; 6 ஆண்டுகளில் முதல்முறை!

ஜிஎஸ்டி வரி காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 32 வரை அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.
காஸ் சிலிண்டர் 5% ஜிஎஸ்டி வரம்பில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி போன்ற பெரும்பாலான மாநிலங்களில் கிரீன் எரிபொருளுக்கு வரி விதிக்கவில்லை, சில மாநிலங்களில் வாட் 2% முதல் 4% என்ற அளவில் இருந்தது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியபின் எல்பிஜி சிலிண்டரின் விலையும் எரிபொருளுக்கு வரி விதிக்காத மாநிலங்களில் 12-15 ரூபாய் அதிகரிக்கும்.
இந்நிலையில் மானிய விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.32 உயர்வு உயர்ந்துள்ளது. 5% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.
ஒரே நேரத்தில் 32 ரூபாய் உயர்வது 6 ஆண்டுகளில் இது முதல்முறை ஆகும்.