மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தண்ணீருக்கள் ரூபிக் க்யூப்பை ஒன்றிணைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையைச் சேர்ந்த சின்மய் பிரபு (20) கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நீச்சல் குளம் ஒன்றில் தலை வரை தண்ணீரில் முழ்கிய நிலையில் ரூபிக் க்யூப்பை சரியாக ஒன்றிணைத்தார். 


இந்நிலையில் இதற்காக அவருக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்த சாதனையை ஒரு நிமிடம் 48 வினாடிகளில் செய்து முடித்துள்ளார். 


முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு கால்களால் ரூபிக் க்யூப்பை ஒன்றிணைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர்.