குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் (93 தொகுதிகளுக்கு) இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு நடைபெற்று வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று நடந்துக்கொண்டு இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 


இந்நிலையில் பாஜ கட்சியின் மூத்த தலைவர் எல்.கே அத்வானி இன்று அகமதாபாத் மாவட்டத்தின் ஜமால்பூர் காதியா பகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.


 



 


 



 



பிரதமர் மோடி அகமதாபாத் சபர்மதி ரேனிப்பில் வாக்களித்தார்.