ஜுனகத்: 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதி என 2 கட்டமாக நடைபெற்றது. பின்னர் வாக்குபதிவு நடைப்பெற்ற 6 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு டிசம்பர் 17 அன்று நடைப்பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை டிச., 18 நடைப்பெற உள்ளது. 



இந்நிலையில் ஜுனகத் பகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைப்பெற உள்ள இடத்தில் வைக்கப்படுள்ள EVMs, VVPAT இயந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை அறைகளின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் ஊழியர்கள் பார்வையிட்டனர்.


பார்வையிட்ட பின்னர் அவர் தெரிவித்ததாவது, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க முன்னேற்பாடுகள் வலுவான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.