மற்றும்மொரு கொடுமை, ஹரியானாவில் உள்ள குர்கானில் 25 வயதான பெண் திங்கள் இரவு, இரண்டு ஆண்களால் துரத்தப்பட்ட விவகாரம் மக்களை திடுக்கிட வைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குருகோனை சேர்ந்த பெண்மணி, இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தினை ஓட்டிச்சென்ற பொது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் காரில் பின்தொடர்ந்து உள்ளனர். சுமார் 3 கிமி தூரம் வரை அவர் பின்தொடரபட்டுள்ளார்.


இதனால் பயமுற்ற அந்த பெண்மணி அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். எனினும் அவரால் பின் தொடர்ந்த காரின் எண்ணை கூறமுடியவில்லை.


இதுக்குறித்து பொலிசார் கூறுகையில், CCTV பதிவினை கொண்டு அந்த நபர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக கூறினார்.