ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை ஜம்மு காஷ்மீர் பந்திப்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படை வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 


இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 1 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பதுங்கியுள்ள மேலும் 2 பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடர் துப்பாக்கிச்சண்டை. 
 
இதையடுத்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.



முன்னதாக, மேற்று காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த தாக்குதலில் போலீசார் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த அம்பவம் குறிப்பிடத்தக்கது...!