பல வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்தில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைதுசெய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் விஜய் மல்லையா, நேற்று லண்டனில் நடந்த பார்முலா-1 கார்ப் பந்தயத்தில் காணப்பட்டார்.


அப்போது பேசிய அவர்:-


தேர்தல் பிரசாரங்களில் என்னைப் பற்றிப் பேசுவதைப் பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளுக்கு மத்தியில், நான் விளையாட்டுப் பொருளாகிவிட்டேன் என்பது தெரிகிறது. சட்டம் அதன் கடமையைச் செய்யும். இங்கிலாந்துச் சட்டப்படி நான் பத்திரமாக உள்ளேன்' என்று கூறினார்.