திருப்பதி: மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில், திருப்பதி-யில் தலை துண்டிக்கப்பட்ட பெண் குழந்தையின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திரா மாநிலம் திருப்பதியின் கலவங்குண்டா பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் உடல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட உடலானது மிகவும் சிதைந்த நிலையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இக்குழந்தையின் வயது சுமார் ஒரு வயதாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தலையிழந்த நிலையில் குழந்தையின் விவரம் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.


குழந்தையின் அங்க அடையாளங்களை கொண்டு குழந்தையின் விவரம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.